Photobucket - Video and Image Hosting

புதிய ஜனநாயகம் - செப்டம்பர்-2006

அட்டைப் படக் கட்டுரை:

கருணாநிதி - அன்புமணி - புத்ததேவ்கோக்-பெப்சியின் புதிய அடியாட்கள் -குப்பன்

""கோக்-பெப்சி நிறுவனங்கள் விற்கும் குடிதண்ணீரில் மட்டும் நச்சுப் பொருட்களை சுத்தமாக்கிவிட முடியும் போது குளிர்பானங்களில் மட்டும் ஏன் நச்சுப் பொருட்கள் இருக்கின்றன?""

""அதற்கு பதிலாக, வேண்டுமென்றே, தூரோகத்தனமாக ஒரு வேலையை பா.ஜ.க. அரசு செய்தது. குளிர்பானத் தாயாரிப்புக்குப் பயன்படும் தண்ணீரில் பூச்சிக் கொல்லி நச்சின் அளவை வரையறுத்துவிட்டு, தயாரித்து முடித்து விற்பனைக்கு வரும் குளிர்பானத்தில்....""

""அந்த வரையறையை அவர்கள் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னதாக மக்கள் துரோகி அன்புமணி இராமதாசு பொறுப்பில் உள்ள சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகச் செயலாளர் தனது முடிவை வெளியிடாது தள்ளி வைக்கும்படி இந்தியத் தரக் கட்டுப்பாட்டுக் கழகத்துக்கு கடிதம் எழுதினார்""

""போலி கம்யூனிஸ்டுகள் தாங்கள் ஆளும் கேரளாவில், கோக்-பெப்சிக்கு எதிராக நாட்டிலேயே "அதிதீவிர" நடவடிக்கை எடுத்தபோதும், துரோகக் கம்யூனிஸ்டுகளின் தளபதியும் மே.வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா அது பற்றி தனக்குத் தெரியாது....""

""இத்தனைக்கும் கொல்கத்தாவில் விற்கப்படும் கோக்-பெப்சியில்தான் நாட்டிலேயே மிக அதிகமாக - அதாவது 140 மடங்கு நச்சு பொருள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.""

""......வக்காலத்து.....போலி முற்போக்கு-போலி கம்யூனிஸ்டு அணியின் தளபதி கருணாநிதி. புதுச்சேரியில் தடைவிதிக்காது, பயனேதும் இல்லை என்கிறார். அண்டை மாநிலங்களில் கள்ளும் சாராயமும் ஆறாக ஓடியபோது இங்கு மட்டும் மது விலக்கு இருந்தது எப்படி என்ற கேள்வி அந்தப் 'பகுத்தறிவாளருக்கு" எழவில்லை""

""...600 கோடி விளம்பரத்துக்கு வாரியிறைக்கிறது.... அதில் பெருந்தொகை, நான்கு மாநிலங்களில் 10 அலைவரிசைகளை நடத்தும் கருணாநிதி குடும்பத்து சன் குழுமத்திற்குப்......""

""சமூக நீதி நடிகர் ராமதாசின் குலக்கொழுந்து அன்புமணி இராமதாசு..... பன்னாட்டுத் தொழில்கழகங்களின் எடுபிடியாகவே செயல்படுகிறார்....""

*** ***

பின் அட்டைப் படம்:

1800-1801தென்கத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்திய சுதந்திரப் போரின் மரபை உயர்த்திப் பிடிப்போம்!

1806 - வேலூர் சிப்பாய்ப் புரட்சி 200 ஆம் ஆண்டு

1857 - வட இந்திய சுதந்திரப் போர் 150-ஆம் ஆண்டு

1906 - ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் தோழர் பகத்சிங் பிறந்தநாள் 100 ஆம் ஆண்டு

ஆகஸ்டு 15 போலி சுதந்திரத்தைத் திரைகிழிப்போம்!

மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!- என 14.8.06 அன்று தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் நடத்திய தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!

பொங்கி எழட்டும் சுதந்திர வேட்கை!

பொசுங்கி அழியட்டும் மறுகாலனியாதிக்கம்!

*** ***

தலையங்கம்:

ஈழப் போர்: நீடிக்கும் இழுபறி!

""ஈழ மக்கள் மீது ராணுவ ரீதியான தீர்வு எதையும் திணிக்க முடியது என்பதையே இன்றைய போர் நிலைமைகள் காட்டுகின்றன""

*** ***

கட்டுரைகள்:

#1) "நாட்டைக் காக்க கோக்கை விரட்டு!" - நாடெங்கும் பரவும் கோக் எதிர்ப்புப் போராட்டங்கள்

""கோக்கும் பெப்சியும் வெறும் நச்சுப் பானங்களல்ல; அவை, அமெரிக்க மூத்திரம்; அமெரிக்க மேலாதிக்கத்தின் சின்னம்; ஏகாதிபத்தியக் கொள்ளையின் அடையாளம். கோக் எதிர்ப்புப் போராட்டம் என்பது மறுகாலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் அங்கம்....""

"" நெல்லை சந்திப்பு பேரங்காடி முன்பாக கோக்-பெப்சியைத் தடை செய்யக் கோரி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது கோக் எதிர்ப்புப் போராட்டக் குழு தலைவரான வழக்குரைஞர் இரா.சி. தங்கசாமி அவர்கள் தலைமையில்.... நெல்லை மாவட்ட வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் முருகேசன், பா.ம.க. மாநாகரத் தலைவர் மோகன்ராஜ், மானூர் ஒன்றிய கவுன்சிலர் மணி.........""

""கோக் ஆலை அமைந்துள்ள நெல்லை-கங்கை கொண்டானில் ஆகஸ்டு 15 அன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில், கோக் ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்து அதை வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.""

""......நச்சுப்புகை, கழிவுகள் இவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி ஆவேசமாக குற்றம்சாட்டிய உறுப்பினர்களும், பொதுமக்களும் கோக் ஆலையை உடனடியாக வெளியேற்றக் கோரினர். கோக்கிற்கு ஆதரவாக பேச முற்பட்ட கைக்கூலி மனோகரன் என்பவனை கூட்டத்தினர் ஆத்திரத்தோடு தாக்க முற்பட்டதும் போலீசு தலையிட்டு அவனை மீட்டுச் சென்றது...""

""ஓங்கட்டும் கோக் எதிர்ப்புப் போராட்ட்ம்! ஒழியட்டும் மறுகாலனியாதிக்கம்!""

*** ***

#2) எச்சில் காசில் ஏகாதிபத்திய எதிர்ப்பு!

""ஏகாதிபத்தியத்தை வீழ்த்த பாட்டாளி வர்க்க சோசலிசமே ஒரே தீர்வு - என்ற சிந்தனைக்கு மக்கள் சென்றுவிடக்கூடாது என்று தடுப்பதற்காகவும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை சீர்குலைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள கைக்கூலி அமைப்புதான் உலக சமூக மாமன்றம்(WSF). ஃபோர்டு பவுண்டேசன், ........ எச்சில் காசில் வயிறு வளர்க்கும் தன்னார்வக் குழுக்களின் தலைமைப் பீடம்தான் உ.ச.ம...""

""இந்த மாநாட்டை நடத்த, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களைவிட சி.பி.எம். கட்சியின் மக்கள் திரள் அமைப்புகள்தாம் அதிக முயற்சியும் அக்கறையும் காட்டின.""

"""மாநாடு நடந்த விதமே அதன் யோக்கியதையை காட்டி விட்ட நிலையில்.....""

*** ***

#3) குற்றக் கும்பல்களின் பிடியில் திணறும் இந்தியா - ஆர்.கே

""'பொதுவில் சொன்னால், குற்றவாளிகளில் பலர் சூழ்நிலைக்குப் பலியானவர்கள்தாம்'- இப்படிச் சொன்னவர் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா.""

""பெரும்பாலான கிரிமினல் குற்றங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டே நிகழ்த்தப்படுகின்றன. அப்படிப்பட்ட குற்றவாளிகள் பெரும்பாலும் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் - என்று சொல்லியிருந்தால்தான் சரியாக் இருக்கும்""

""சந்தர்ப்ப சூழ் நிலைகளால் குற்றங்கள் புரிபவர்கள்தான் பெரும்பாலும் வழக்குமன்றங்களில் நிறுத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் பெரும்பாலும் தண்டிக்கப்படுகிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு கிரிமினல் குற்றங்கள் புரிபவர்கள் வழக்குமன்றங்களுக்குப் பெரும்பாலும் கொண்டு வரப்படுவதில்லை. தவறிப்போய் கொண்டு வரப்படுபவர்களும் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை - என்று சொல்லியிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்.""

""......போலி முதல் தக்வல் அறிக்கை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தில் நடந்த மோசடிகள் குறித்த வழக்கு. 2. சபரி மலை தலைமைத் தந்திரி கண்டர மோகனருவைக் கடத்தி மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகக் கூறிப் போடப்பட்டுள்ள சோபா ஜான் கும்பல் மீதான வழக்கு.3. 3000 கோடி ரூபாய் அளவுக்கு போலி முத்திரைத்தாள் அச்சடித்து நாடு முழுவது......""

""இவை மூன்றும் சிறிய அளவிலான குற்ற விவகாரங்கள்தாம், அரசியல்-கிரிமினல் குற்றக் கும்பல்களால் திட்டமிட்டு, அமைப்பு ரீதியாக நடைபெறும் குற்றவிவகாரங்களூம் ஏராளமாக உள்ளன. அவை விதி விலக்கின்றி சட்டம் மற்றும் நீதியின் காவலர்களால் மூடி மறைக்கப்பட்டு, குற்றவாளிகள் பெரிய மனிதர்களாக வலம் வருகிறார்கள்......அரசியல்வாதிகள் - போலிசு அதிகாரிகள் - கிரிமினலகள் அடங்கிய முக்கூட்டை அம்பலப்படுத்திய வோரா கமிட்டி அறிக்கை விவரங்கள், இன்றைய அரசியல் - சமூக அமைப்பு முழுவதும் புழுத்து நாறுவதையே காட்டுகின்றன""

*** ***

#4) அரசு பயங்கரவாதம் - மத பயங்கரவாதத்தால் பிளவுபடும் மும்பய் - செல்வம்

""1970-களில் மில் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டங்களால் சிவந்திருந்த மும்பய் நகரம், இப்பொழுது காவியையும், பச்சையையும் பூசிக் கொண்டு அருவெறுப்பாகக் காட்சி அளிக்கிறது. முஸ்லீம் தீவிரவாதிகளூம், இந்திமத பயங்கரவாதிகளும் எது நடக்க வேண்டும் என்று விரும்பினார்களோ, அந்த பிளவு மும்பையில் ஆழமாகப் பரவி வருகிறது.""

""போலி கம்யுனிஸ்டுகள் தூக்கி பிடிக்கும் நேரு பாணி மதச்சார்பின்மை கொள்கை முற்றிலும் தோல்வியடைந்து விட்டதற்கு, மும்பய் நகரமே சாட்சி. மதவெறி பயங்கரவாதத்திற்க்கு எதிரான போராட்டத்தை நாடு மறூகாலனியாக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இணைத்து நடத்தும் பொழுதுதான், முஸ்லீம் மதவெறியர்க்ளை தனிமைப்படுத்த முடியும்; இந்து மதவெறி பயங்கரவாதத்தை நேருக்கு நேராகத் தாக்க முடியும். அதுவரை மும்பயில் நிலவும் அமைதியை, வெடிகுண்டின் திரி எரியும் பொழுது ஒருவித அமைதி நிலவுமே, அதோடு மட்டுமே ஒப்பிட முடியும்.""

*** ***

#5) போலி சுதந்திரத்தைத் திரை கிழிப்போம்! மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்! - தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்முழக்க ஆர்ப்பாட்டங்கள்

*** ***

#6) எம்.ஜி.ஆர். - ஜெயா - விஜயகாந்த் மூன்றாவது கழிசடை அரசியல்வாதி! - மாணிக்கவாசகம்

""தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு. ஒரு 4-5 சீட்டுக்கள் கூடுதல்களாக கிடப்பது போன்ற சந்தர்ப்பவாத நலன்களூக்காகவே அரசியல் கூட்டுகளை உருவாக்கிக் கொண்டு, ஜெயலலிதாவை ஆட்சியில் அமரவைத்ததைப் போலவே நாளை விஜய்காந்தையும் ஆதரிக்கத் தயங்கமாட்டார்கள். அதனால்தான் இவர்களும் நடிகர் விஜயகாந்தும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.""

""..... ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்களின் கவர்ச்சிவாதத் தயவிலேயே அரசியல் நடத்துபவர்களாக உள்ளனர். சினிமா அரசியலை எதிர்ப்பதாக அவ்வப்பொழுது சவடாலடிக்கும் இராமதாசு, திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தீடிர்த் தலைவர்கள் கூட இந்த எதிர்ப்பு செலவில்லாத, உழைப்பில்லாத திடீர்ப் பிரபலமடைவதற்கான விளம்பரம் என்ற வகையிலேதான் இதைச் செய்கிறார்கள்.""

*** ***

#7) லெபனான்: அமெரிக்க-இஸ்ரேலிய பயங்கரவாதம் போருக்குப் பின்னே மேலாதிக்கம் - மனோகரன்

""இயற்கை வளமும் இலக்கியச் செழுமையும் கொண்ட, கனவுகளின் தேசமாகச் சித்தரிக்கப்பட்ட லெபனான் இன்று நொறுங்கிக் கிடக்கிறது. "முறிந்த சிறகுகள்" வழங்கிய உலகப் புகழ்பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரானின் லெபனான், இப்போது மீண்டும் சிறகுகள் முறிக்கப்பட்டு துடிதுடித்து.......""

""'புதிய மத்தியக் கிழக்கை நிறுவும் நேரமிது; புதிய மத்தியக் கிழக்கு திட்டத்தை யார் ஏற்கவில்லையானாலும் அவர்களை நிர்பந்தித்துப் பணியச் செய்வோம்' என்று அமெரிக்காவின் நோக்கத்தை வெளிப்படயாகவே கூறியுள்ளார், அமெரிக்க வெளியுறவு செயலரான கண்டலீசா ரைஸ். அதாவது, இஸ்ரேலிலிருந்து பாலஸ்தீன மக்களை முற்றாக வெளீயேற்றுவது, லெபனான் உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகளை ஷியாம் சன்னி, அரபு கிறித்தவர்கள் என மதப்பிரிவுகளின் அடிப்படையிலும் தேசிய இனச் சிறுபான்மையினர் அடிப்படையிலும் கூறுபோடுவது, எண்ணைய வளமிக்க வளைகுடா பிராந்தியத்தை விழுங்கி கேள்விக்கிடமற்ற மேலாதிக்கத்தை நிறுவுவது........""

""ஏகாதிபத்தியவாதிகளின் இம்மேலாதிக்க சதிகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், இனியும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அரபு மக்களும் வெற்றி பெருமிதத்தில் திளைத்திருக்க முடியாது. அரபு மக்களின் ஒற்றுமை, மதச்சார்பின்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இதர ஏழை நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுடன் கூட்டிணைவு என்ற திசையில் முன்னேறினால் மட்டுமே......""

*** ***

#8) வளர்ச்சியின் பெயரால் மறுகாலனியாதிக்கம் - ரஹீம்

""அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில், இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக மாற்றிவிட்ட மன்மோகன் சிங் அரசு, உலக வர்த்தகக் கழக கூட்டத்தில் அமெரிக்காவை எதிர்த்து வெளி நடப்பு செய்திருப்பதை நாமெல்லாம் கையைக் கிள்ளிப் பார்த்துவிட்டுத் தான் நம்ப வேண்டியிருக்கும்.""

""ஜெனிவா பேச்சுவார்த்தையின் தோல்விக்கு, விவசாயத்தில் தாரளமயத்தைப் புகுத்துவதில் அமெரிக்காவுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையேயுள்ள இழுபறி மட்டும் காரணம் இல்லை.""

""......குறிப்பாக, மானியக் குறைப்பு, விவசாயப் பொருள் ஏற்றுமதி, மரபீணி மாற்றம் செய்யப்பட்ட விவசாய விளைபொருட்களின் மீது ஐரோப்பா விதித்துள்ள தடை ஆகிய விவகாரங்களில் ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவுக்குச் சில சலுகைகளை வழங்கியிருந்தால், ஜெனீவா பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்திருக்கும்; ஆகையால், கமல்நாத்தின் வெளி நடப்பை அளவுக்கு மீறீ ஊதிப் பெருக்கக் கூடாது என வர்த்தகத் துறையின் முன்னாள் செயலாளர் எஸ்.பி. சுக்லா அம்பலப்படுத்தி இருக்கிறார்.""

""..... இந்த ஆலோசனையை அமெரிக்காவும், ஐரோப்பிட யூனியனும் ஏற்று நடைமுறைப்படுத்தினால், ஏழை நாட்டு விவசாயிகளின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் வந்துவிடுமா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.""

""....இந்த பாதுகாப்பு கவசத்தை பயன்படுத்தி, அமெரிக்காவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் பருத்திக்குத் தடை விதித்து, அதன் மூலம் விதர்பாவைச் சேர்ந்த பருத்தி விவசாயிகளை இந்திய அரசு காப்பாற்றியிருக்கலாமே? அப்படித் தடை போட்டுவிடாமல், மன்மோகன் சிங்கின் கையைக் கட்டிப் போட்டது யார்?""

""உள் நாட்டில் விளைந்த கோதுமையைக் கொள்முதல் செய்யாமல், ஆஸ்திரேலியாவில் இருந்து புழுத்துப் போன கோதுமையை மத்திய அரசு இறக்குமதி செய்வதற்காக, உணவுப் பொருள் இறக்குமதி சட்டத்தை மாற்றீயமைத்தார்களே......""

""....'வளர்ச்சி' என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் தொடுக்கும் மறுகாலனியத் தாக்குதலில் இருந்து நமது நாட்டு விவசாயத்தையும், மக்களையும் காப்பாற்ற இந்த அடிவருடி கும்பலையா நம்பியிருக்க முடியும்?""

*** ***

#9) திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் - திருவாசகம் பாடத் தடை மனுநீதித் தீர்ப்பு - மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்

""சிதம்பரம் அருகேயுள்ளா பிச்சாவரத்தில் தற்பொழுத் வசித்து வரும் வீரப்ப சோழனார் என்ற முன்னாள் ஜமீன்தார் குடும்பத்தைச் செர்ந்த முன்னோர்களீடம்தான் நடராஜர் கோவிலின் நிர்வாகம் இருந்து வந்தது. இரவில் கோவில் நடையை மூடிய பிறகு, கோவில் சாவியைப் பல்லக்கில் வைத்து பிச்சாவரம் சோழனார் ஜமீந்தார் வீட்டில் ஒப்படைக்க வேண்டும். காலையில் போய் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மரபாக இருந்து வந்தது....""

"".....கையெழுத்து இயக்கமொன்றை, சிதம்பரம் நகர் பகுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையம், தி.க., பா.ம.க., சி.பி,ஐ., சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தோ.மு., பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன.""

""....ஒருவருக்கு ஒரு ரூபாய்' என்று போராட்ட நிதியினையும் வழங்கி வருகின்றனர். பல இளைஞர்களும், மாணவர்களும் அடுத்த கட்ட போராட்டத்திற்குத் தங்களையும் அழைக்கக் கோரி, பெயரையும், முகவரியையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.""

""பார்ப்பனர்களும், நீதிமன்றமும் தமிழ் வழிபாட்டு உரிமைக்கு குறுக்கே நந்தியாக நின்றாலும், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் இக்கோரிக்கைக்கு ஆதரவாக நிற்ப்பதற்கு இதுவே சாட்சி.....""

*** ***

#10) கந்துவட்டிக் கொள்ளையர்களின் பிடியில் கரூர் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள்

""மாதம் முழுவது பீ, மூத்திரங்களில் குளித்து நனைந்து நகரத்தைச் சுத்தப்ப்டுத்தும் துப்புரவுத் தொழிலாளர்கள், அற்பமான சம்பளத் தொகையைக் கூடத் தானும் தனது குடும்பத்தாரும் அனுபவிக்க முடியாத அவலத்தை என்னவென்று சொல்வது?""

""கிருஷ்ணம்மாள் என்ற துப்புரவுத் தொழிலாளி ஆறு வருடங்களுக்கு முன்பு ரூ. 10,000 கடனாகப் பெற்றதற்கு அவரிடமிருந்து இதுவரை ரூ. 86,000-ஐ வட்டியாக மட்டுமே அபகரித்துச் சென்றுள்ளது முனியப்பன் கும்பல்.""

"",.....கீழ்த்தரமான காட்டுமிராண்டி கும்பல் என்பதற்கு, தன்னிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கிய கன்னியம்மாளின் தலைமுடியை இழுத்து, அவர் கட்டியிருந்த சேலை முழுவதையும் உருவிப் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியிருப்பதே....""

""இத்தகைய கொடுமைகளையெல்லாம் தெரிந்திருந்தும் மௌனம் சாதித்து வருகின்றன இங்குள்ள ஓட்டுக் கட்சி தொழிற்சங்கள். ..... பு.மா.இ.மு. அமைப்பினர் நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டி, போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.""

*** ***

துணுக்குச் செய்திகள்:

#1) திருட்டு தீட்சிதரே

#2) "காமவெறியன் லியாகத் அலியை தூக்கில் போடு!" - பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம், திருச்சி

*** *** *** *** *** ***